follow the truth

follow the truth

May, 13, 2025
HomeTOP1சஜித் பிரேமதாச இந்த நாடு ஆப்கானிஸ்தானை போல மாறிவிடும் என ஏற்க மறுத்தார் - SJB...

சஜித் பிரேமதாச இந்த நாடு ஆப்கானிஸ்தானை போல மாறிவிடும் என ஏற்க மறுத்தார் – SJB எம்பி

Published on

நாட்டை ஏற்றுக்கொள்ளுமாறு கூறிய போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த நாடு ஆப்கானிஸ்தானை போல மாறிவிடும் என்று ஏற்க மறுத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுர பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹூமான் தெரிவித்திருந்தார்.

காலி நகர சபை மைதானத்தில் இன்று (27) நடைபெற்ற “ஒன்றாக வெல்வோம் – காலியில் நாம்” கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுர பாராளுமன்ற உறுப்பினர் இஷாக்
ரஹூமான் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

“.. இரண்டு வருடங்களுக்கு முன்பு நாடு இருந்த நிலையை நாம் மறந்து விட முடியாது. அந்த நேரத்தில் நாட்டை ஏற்றுக்கொள்ளுமாறு கூறிய போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த நாடு ஆப்கானிஸ்தானை போல மாறிவிடும் என்று ஏற்க மறுத்தார். அவர் தேர்தலில் வென்றால் நாடு மீண்டும் பழைய நிலைக்குச் செல்லும்.

எனவே மக்கள் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்ற வேளையிலும் எதிர்கட்சித் தலைவர் நிபந்தனை கடிதங்களை எழுதிக்கொண்டிருந்தார். நாட்டை மீட்ட ஜனாதிபதியை பாதுகாக்க வேண்டியது மக்களின் பொறுப்பாகும்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள்...

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள்...

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான...