follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP1சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை இன்று சந்திக்கும் ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை இன்று சந்திக்கும் ஜனாதிபதி

Published on

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று (01) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க உள்ளனர்.

இந்த கலந்துரையாடல் இன்று காலை இடம்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது தவணையை பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

“நான்காவது தவணையை பெறுவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

எந்தத் தாமதமும் இன்றி, தேர்தல் காலத்திலும் அந்த வேலைத்திட்டத்தில் எவ்வித விலகலும் இன்றி நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைத் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

ஏனெனில் மூன்றாவது பரிசீலனையில் கிடைக்கவுள்ள 4வது தவணை எந்த வகையிலும் தாமதமானால் அது இலங்கையின் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அந்த விளைவை தவிர்க்க ஜனாதிபதி விசேட வேலைத்திட்டத்தை தயாரித்துள்ளார்.

வரவிருக்கும் காலத்தில், கடன் உரிமையாளர்களின் இந்த திட்டத்தை எவ்வாறு பாதுகாப்பது குறித்து கலந்துரையாட எதிர்பார்க்கின்றோம்” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான கட்டணங்கள் வெளியீடு

ஈலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவையானது இலங்கையில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தநிலையில், குடியிருப்பு மற்றும் வணிக...

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு – இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய வாய்ப்பு

தென் கொரியாவின் E-8 வீசா (பருவகாலத் தொழிலாளர் திட்டம்) கீழ் இலங்கை தொழிலாளர்களை ஈடுபடுத்தும் முன்னோடித் திட்டத்திற்கு 2025...

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நேரங்களில் மழை...