follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2நாமல் அழைப்பு விடுத்த பொஹட்டுவ சந்திப்பிற்கு இரண்டு எம்பிக்கள் மட்டும்..

நாமல் அழைப்பு விடுத்த பொஹட்டுவ சந்திப்பிற்கு இரண்டு எம்பிக்கள் மட்டும்..

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கலந்துகொண்ட கம்பஹா மாவட்ட பிரதிநிதிகள் கூட்டத்தில் திவுலப்பிட்டியவில் நடைபெற்ற இம்மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பு திவுலபிட்டியவில் உள்ள விழா மண்டபத்தில் இடம்பெற்றது.

குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ அவர்களுடன் திவுலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் மின்சார இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த மற்றும் உள்நாட்டு மருத்துவ இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

கம்பஹா மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் 12 முன்னாள் தலைவர்கள், உப தலைவர்கள், முன்னாள் பிரதி அமைச்சர்களான சரத் குமார குணரத்ன, சரண குணவர்தன, மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான நெலுக் தர்ஷன மல்லவ, ஏ. சகா உல்லா, ஆனந்த ஹரிச்சந்திர, மெரில் பெரேரா, ராஜித ஹப்புஆராச்சி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

களனி, ஜா அல, தொம்பே, மஹர, கம்பஹா ஆகிய உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர் மற்றும் கம்பஹா ஆகியோர் இக்கூட்டத்தில் இணைந்ததுடன், யாகம உள்ளூராட்சி சபையின் முன்னாள் தலைவர் வெளிநாடு செல்வதால் கலந்துகொள்ள முடியாமல் போனதாக அறியமுடிகிறது.

பியகம, கட்டான, மீரிகம, அத்தனகல்ல மற்றும் பேலியகொட ஆகிய உள்ளுராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்திய உப தலைவர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

பிரதிநிதிகளின் உள்ளகக் கூட்டமாக நடைபெற்ற இந்தக் கூட்டம் அவ்வப்போது ஊடகங்களுக்கும் அம்பலமானது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...