follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுமாணவன் ஹெல்மட் அணியாமல் சென்றதால் பொலிஸார் தாக்குதல்

மாணவன் ஹெல்மட் அணியாமல் சென்றதால் பொலிஸார் தாக்குதல்

Published on

16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரை பயாகல பொலிஸ் போக்குவரத்து அதிகாரிகளினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பயாகல, மலேகொட பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர் தாக்கப்பட்டு இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் நேற்று (07) பிற்பகல் தனது தந்தையின் மோட்டார் சைக்கிளில் நண்பருடன் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.

அந்த நண்பர் பாதுகாப்பு தலைக்கவசத்தை அணியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மாணவன் பல தடவைகள் தாக்கப்பட்டதாகவும் தாக்குதலுக்கு இலக்காகி கீழே விழுந்த மாணவன் பின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரி ஒருவர் தரையில் விழுந்து தனது முதுகை மிதித்ததாக குறித்த மாணவன் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான பாடசாலை மாணவன் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மாணவனின் தந்தை, களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அணுசக்தி விபத்துகளுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பு

அணுசக்தி விபத்துகள் ஏற்படும் சூழ்நிலைகளில், நாட்டிற்கு ஏற்படக்கூடிய கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்கக்கூடிய முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில்,...

அர்ச்சுனாவின் பதவி இரத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க, மேன்முறையீட்டு...

சர்வஜன அதிகார உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

பதியதலாவ பிரதேச சபையில் அதிகாரம் நிறுவும் செயல்களில் கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு எதிராக நடந்து கொண்டதற்காக, சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர்...