follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுபொடி லெசியை சந்திக்க சட்டத்தரணிகளுக்கு அனுமதி

பொடி லெசியை சந்திக்க சட்டத்தரணிகளுக்கு அனுமதி

Published on

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான பொடி லெசி எனப்படும் ஜனித் மதுஷங்கவை சந்தித்து ஆலோசனை பெறுவதற்காக அவரது சட்டத்தரணிகளுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முர்து பெர்னாண்டோ, காமினி அமரசேகர மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசகர்கள் ஆயம் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

பொடி லெசியின் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி ஹர்ஷிக சமரநாயக்க, கடந்த 3ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் திணைக்களத்துக்கு தனது சேவைபெருநரை சந்திப்பதற்காகச் சென்றிருந்த போதிலும், காவல்துறை அத்தியட்சகர் மெரில் லமாஹேவா சந்தர்ப்பம் வழங்கவில்லையென நீதிமன்றில் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த மனு எதிர்வரும் 16ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...