follow the truth

follow the truth

July, 17, 2025
Homeஉள்நாடுநேற்று மட்டும் 380, 463 பேருக்கு கொவிட் தடுப்பூசி

நேற்று மட்டும் 380, 463 பேருக்கு கொவிட் தடுப்பூசி

Published on

நாட்டில் நேற்றைய தினம் 380, 463 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் 338, 914 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரை சைனோபாம் முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 63 இலட்சத்து 24 ஆயிரத்து 298 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், 28, 054 பேருக்கு இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

13, 465 பேருக்கு மொடெர்னா தடுப்பூசியும் நேற்று செலுத்தப்பட்டதாக, தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரையில் 709, 468 பேருக்கு மொடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் நேற்றைய தினம் 30 பேருக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் மூலம் இதுவரையில், அந்த தடுப்பூசியினை செலுத்திக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 114, 105 ஆக அதிகரித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நிலையான அபிவிருத்தியின் மூலம் சக்தி பாதுகாப்பை அடைவதற்கும் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது

சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் (ISA) ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியக் குழுவின் ஏழாவது மாநாடு இன்று(16) கொழும்பு...

2026 ம் ஆண்டுக்கான பூர்வாங்க வரவு செலவுத் திட்ட கலந்துரையாடல் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிப்பது தொடர்பான பூர்வாங்கத் வரவு செலவுத் திட்ட திட்டமிடல்...

சீன அரசிடமிருந்து கிடைக்கப் பெற்ற நன்கொடையானது எமக்குப் பெரும் மதிப்பு மிக்கதாகும்

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்குத் தேவையான ரூ.5,171 மில்லியன் பெறுமதியான துணி அனைத்தும் சீன அரசாங்கத்தின் மானியமாக...