follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP1தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி இன்று நள்ளிரவுடன் நிறைவு

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி இன்று நள்ளிரவுடன் நிறைவு

Published on

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று (10) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

இதன்படி, தேர்தல் கடமைகளில் இருந்து விலக்கு பெற்றவர்களைத் தவிர, அரச சேவை மற்றும் மாகாண அரச சேவை உத்தியோகத்தர்கள் அனைவரும் தபால் வாக்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும், மேலும் தபால் வாக்குகளுக்கு விண்ணப்பிக்காதது மற்றும் குறைபாடுகளுடன் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது ஒரு காரணமல்ல.

இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய சுயேச்சைக் குழுக்களுக்கான கட்டுப்பணத்தை வைப்புச் செய்யும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைத் தவிர, அனைத்து சுயேச்சைக் குழுக்களும் பொதுத் தேர்தலுக்குப் கட்டுப்பணத்தை வைப்புச் செய்ய வேண்டும்.

அதன்படி நேற்று (09) வரை 293 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுவரையில் திகாமடுல்ல மாவட்டத்திற்காக அதிகளவான சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதோடு அந்த எண்ணிக்கை 42 ஆகும்.

இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக 88 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

46 அரசியல் கட்சிகளும், 42 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை (11) நண்பகல் 12 மணி வரை நாடளாவிய ரீதியில் உள்ள மாவட்ட செயலக அலுவலகங்களில் வேட்புமனுக்களை கையளிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்பின், ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய, ஒன்றரை மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பகிடிவதை தொடர்பில் பிரதமரின் கவனம்

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் கொடுமைப்படுத்தல், துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளை தடுக்கும் வகையில் பரிந்துரைகள் மற்றும் தீர்வுகளை...

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான கட்டணங்கள் வெளியீடு

ஈலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவையானது இலங்கையில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தநிலையில், குடியிருப்பு மற்றும் வணிக...

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு – இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய வாய்ப்பு

தென் கொரியாவின் E-8 வீசா (பருவகாலத் தொழிலாளர் திட்டம்) கீழ் இலங்கை தொழிலாளர்களை ஈடுபடுத்தும் முன்னோடித் திட்டத்திற்கு 2025...