follow the truth

follow the truth

June, 23, 2025
Homeஉள்நாடுஜனாதிபதி மற்றும் மியன்மார் தூதுவர் சந்திப்பு

ஜனாதிபதி மற்றும் மியன்மார் தூதுவர் சந்திப்பு

Published on

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மியன்மார் தூதுவர் மலர் தான் டைக் (Malar Than Htaik) இடையிலான சந்திப்பு இன்று(25) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் தூதுவருக்கு விளக்கமளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிரஜைகளின் பாதுகாப்பு ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மியன்மாரில் மனித கடத்தல்காரர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை விடுவிப்பது தொடர்பில் இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தூதுவருடன் நீண்ட நேரம் கலந்துரையாடினார்.

இலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவுகள் மற்றும் நீண்டகால கலாசார உறவுகளை மேலும் பலப்படுத்த மியன்மார் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக தூதுவர் குறிப்பிட்டார்.

விவசாயம், கல்வி மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளை மேம்படுத்துவதற்கு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தையும் மலர் தான் டைக் சுட்டிக்காட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரிசிக்கு தட்டுப்பாடு – மறுக்கும் அமைச்சர்

பெரும்போக நெற்செய்கையின் போது எதிர்பார்த்தளவு விளைச்சல் கிடைக்காமையினால் எதிர்வரும் காலங்களில் அரிசியை இறக்குமதி செய்வதற்கான நிலை ஏற்படும் என...

அனைத்து சிறைச்சாலை பிரதானிகளும் இன்று கொழும்புக்கு

நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து சிறைச்சாலை பிரதானிகளும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நீதி அமைச்சரின் தலைமையில் இன்று காலை நீதி...

முட்டை விலைகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்க ஒரு பொறிமுறை

சமூக ஊடகங்கள் மூலம் தினமும் முட்டை விலைகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்க ஒரு பொறிமுறையை அமைக்க அகில இலங்கை...