follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP2குரங்குகளை கொலை செய்வதில் தப்பேயில்லை - எஸ்.பி

குரங்குகளை கொலை செய்வதில் தப்பேயில்லை – எஸ்.பி

Published on

குரங்குகளை கொலை செய்வதில் தவறில்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குரங்குகள் உள்ளிட்ட கூடுதலாகக் காணப்படும் விலங்குகளை கொலை செய்ய வேண்டுமெனவும் நாடு முழுவதிலும் ஆண்டுதோறும் தெருநாய்கள் கொல்லப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஒன்றிலேயே அவர் இவ்வாறான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்தவின் கருத்துடன் பூரணமாக இணங்குவதாகவும், விலங்குகளை கொலை செய்வது குறித்து சிலர் கருத்து வெளியிட்டு வரும் போதிலும் அவற்றை கருத்திற்கொள்ளத் தேவையில்லை எனவும் முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும், காட்டு யானைகள் தொடர்பில் வேறு விதமான அணுகுமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென தெரிவித்த அவர், இலங்கையில் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் யானைகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யானைகளுக்கான தடுப்ப வேலிகளை பலப்படுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். சூழலியலாளர்களின் கருத்துக்களை மட்டும் கேட்டால் இந்த நாட்டில் விவசாயத்தை மேற்கொள்ளவோ அல்லது பொதுமக்களை பாதுகாக்கவோ முடியாது போகும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...

ரயில் நிலைய அதிபர் பதவிக்கு ஆண்களை மட்டும் பணியமர்த்துவது தொடர்பாக 02 பெண்கள் மனுத் தாக்கல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால்...