follow the truth

follow the truth

July, 2, 2025
HomeTOP1பெண் வைத்தியர் பாலியல் வன்கொடுமை - நாடு முழுவதும் வைத்தியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில்

பெண் வைத்தியர் பாலியல் வன்கொடுமை – நாடு முழுவதும் வைத்தியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில்

Published on

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (12) நாடளாவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தத் தீர்மானித்துள்ளது.

நேற்றுமுன்தினம் (10) அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது.

அதன்படி, இன்று காலை 8 மணி முதல் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

அதன்படி, இன்று காலை 8.00 மணி முதல் நாளை (13) காலை 8.00 மணி வரை குறித்த வேலைநிறுத்தம் அமுலில் இருக்கும்.

வேலைநிறுத்தம் இருந்தபோதிலும், அவசர மருத்துவ சேவைகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

குழந்தைகள் வைத்தியசாலைகள், மகப்பேறு மருத்துவமனைகள், சிறுநீரக சிகிச்சை பிரிவுகள், தேசிய மனநல நிறுவனம் மற்றும் முப்படை வைத்தியசாலைகளிலும் இந்த வேலைநிறுத்தத்தை செயல்படுத்த வேண்டாம் என்றும் குறித்த சங்கம் தீர்மானித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோர ரயில் சேவையில் பாதிப்பு

கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனித்தெரு ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயிலொன்று இயந்திர கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக...

அஸ்வெசும இரண்டாம் கட்டம் – தகுதி பெற்றவர்களின் பட்டியல் வௌியீடு

அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், கொடுப்பனவுகளைப் பெற தகுதியுடையவர்களின் பட்டியலை நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல்...

உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வால் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மாதத்தை விட僅தளமாக உயர்ந்துள்ளதால், இந்த மாதத்தில் இலங்கையில் எரிபொருள் விலை...