follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுபண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு

Published on

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, விசேட சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளை கண்டறிவதற்காக நுகர்வோர் விவகார அதிகாரசபையால் நாடளாவிய ரீதியில் இன்று(25) முதல் விசேட சுற்றிவளைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில், பல்பொருள் அங்காடிகள், சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் விற்பனை நிலையங்கள் என்பனவும் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியாயமற்ற விலையில் பொருட்களை விற்பனை செய்பவர்களிடம் ஏமாற வேண்டாம் என நுகர்வோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பஸ் கவிழ்ந்து விபத்து – 15 பேருக்கு காயம்

குடுகல பகுதியில் இருந்து வத்தேகம வழியாக கண்டி நோக்கி பயணித்த வத்தேகம டிப்போவைச் சேர்ந்த பஸ் ஒன்று கவிழ்ந்து...

தரம் 1 மாணவர் சேர்க்கை – விண்ணப்பம் வெளியானது

2026 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் 1 ஆம் வகுப்புக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப்...

சீகிரியா உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படுமா?

உலக பாரம்பரிய தளமான சீகிரியாவை பாதுகாக்க, அதனைச் சுற்றி அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள்...