follow the truth

follow the truth

June, 14, 2025
HomeTOP1கண்டி - மாத்தளை ரயில் மார்க்கத்தில் பொதிகளை ஏற்றுக் கொள்ளல் இடைநிறுத்தம்

கண்டி – மாத்தளை ரயில் மார்க்கத்தில் பொதிகளை ஏற்றுக் கொள்ளல் இடைநிறுத்தம்

Published on

கண்டி – பேராதனை இடையே ரயில் மார்க்கத்தில் திடீரென குழி ஒன்று ஏற்பட்டுள்ளமையினால், கண்டி – மாத்தளை ரயில் மார்க்கத்தில் பொதிகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கண்டி – பேராதனை இடையிலான மலையகப் பாதையின் ரயில் சேவைகளை இன்று (11) காலை முதல் தற்காலிகமாக நிறுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேராதனைக்கும் கண்டிக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்திற்காக இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்கமைய, கண்டி மற்றும் மாத்தளை ரயில் மார்க்கத்தில் பொதிகளை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளும் ஜூன் 21 முதல் இணைய வழியில்

ஜனாதிபதி நிதியிலிருந்து பொதுமக்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் சேவைக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் நாட்டின்...

ஜேர்மன் சுற்றுலாத் துறை பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (13) பேர்லினின் வெல்டொர்ப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜேர்மனியின்...

இஸ்ரேல் – ஈரானுக்கு இடையேயான பதற்ற நிலை – இலங்கையின் கோரிக்கை

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான சமீபத்திய அபிவிருத்திகள் குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தம் கொண்டுள்ளது. இரு நாடுகளும் நிதானத்தைக்...