சர்வசன கட்சி உறுப்பினருக்கு வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததின் காரணமாக பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரத்தைத் தேசிய மக்கள் சக்தி கட்சி கைப்பற்றியது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பண்டுவஸ்நுவர பிரதேச சபைக்குத் தேசிய மக்கள் சக்தி சார்பில் 19 பேரும், எதிர்க்கட்சிகள் சார்பில் 19 பேரும் என 38 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில் இன்று பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் தலைவர், உபதலைவர் ஆகியோரை தெரிவு செய்யும் முதலாவது கூட்டம் நடைபெற்றது.