follow the truth

follow the truth

July, 26, 2025
HomeTOP1தெஹிவளை துப்பாக்கிச் சூடு - சந்தேகநபர் சுட்டுக்கொலை

தெஹிவளை துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் சுட்டுக்கொலை

Published on

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் கடந்த ஜூலை 18 ஆம் திகதி ஒரு நபரை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர், இன்று (25) அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை 4.30 மணியளவில், கஹதுடுவ பகுதியில் பஹலகம, கெதல்லோவிட பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டை விசேட அதிரடிப் படையினர் சோதனையிட்டுள்ளனர். அந்த நேரத்தில், அங்கு ஒளிந்திருந்த சந்தேகநபர், படையினர்மீது துப்பாக்கியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதற்குப் பதிலடி கொடுத்த விசேட அதிரடிப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த விசேட அதிரடிப் படை உறுப்பினர் ஒருவர், தற்போது களுபோவில பயிற்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்த சந்தேகநபரின் சடலம் மேலதிக விசாரணைகளுக்காக வேதர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நாளை மட்டக்களப்பில்

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் திறமை செலுத்திய மாணவர்களை கௌரவிக்கும் கிழக்கு...

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பலர் கைது

போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்காக செயல்படுத்தப்படும் விசேட தேடுதல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக...

பாடசாலை பெயர்ப் பலகைக்கு மாத்திரம் 2.4 மில்லியன் செலவு ? – கோபா குழு வெளியிட்ட தகவல்

809 மாகாணப் பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக மாற்றுவதற்காக பெயர்ப் பலகைகளுக்கு மாத்திரம் 2.4 மில்லியனுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கக்...