follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுஒருபக்க காதல் - 7 பேர் கைது!

ஒருபக்க காதல் – 7 பேர் கைது!

Published on

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரத்தில் பெண் ஒருவரின் உறவினர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த 7 பேரை வாள், கத்தியுடன் நேற்று (19) இரவு கைது செய்துள்ளதாக தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள பெண் ஒருவரை இளைஞன் ஒருவர் ஒருபக்கமாக காதலித்து வந்துள்ளதாகவும் அப்பெண்ணுக்கு விருப்பமில்லாத நிலையில் அவரை இளைஞன் பின் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், பெண்ணின் உறவினருக்கும் குறித்த இளைஞனுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து கடந்த 9ம் திகதி குறித்த பெண்ணை காதலித்து வரும் இளைஞன் அவரது குழுவினருடன் பெண்ணின் உறவினர்கள் மீது மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட 7 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி இருந்த 7 பேரை நேற்று இரவு பொலிசார் கைது செய்ததுடன் அவர்களிமிருந்து வாள் மற்றும் கத்திகளை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

14 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் ‘ Sri Lanka Expo – 2026’

இலங்கை எக்ஸ்போ கண்காட்சி 2026 தேசிய வைபவமாக ஏற்பாடுகளைச் செய்வதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் அவர்கள்...

விலை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே எரிபொருள் விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன

விலை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே விலைகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் போது அவற்றை ஏற்றுக்...

கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்

கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC), யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 30ஆம்...