follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுகட்டார் செல்லும் இலங்கை பணிப்பெண்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கொடுப்பனவுகள்

கட்டார் செல்லும் இலங்கை பணிப்பெண்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கொடுப்பனவுகள்

Published on

கட்டாருக்கு இலங்கை மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து வீட்டுப்பணிப்பெண்கள் பணிகளுக்கு அமர்த்தப்படும்போது அவர்களுக்கான ஆகக்கூடிய வருடாந்தக் கொடுப்பனவுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கட்டாரின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

ஆட்சேர்ப்பு செலவுகளில் நியாயமற்ற அதிகரிப்புக்கு எதிரான கூட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக அதிகபட்ச கொடுப்பனவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் வீட்டுப் பணியாளர்கள் மற்றும் வீட்டுத் தொழிலாளர் சந்தையைக் கட்டுப்படுத்தமுடியும் என்று கட்டாரின் அரசாங்கம் நம்பிக்கை கொண்டிருக்கிறது.

இதன்படி இலங்கையர்கள் 17ஆயிரம் ரியாலுக்கும், இந்தோனேசியர்கள் 17ஆயிரம் ரியாலுக்கும், பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் 15ஆயிரம் ரியாலுக்கும், பங்களாதேஸியர்கள் 14ஆயிரம் ரியாலுக்கும், இந்தியர்கள் மற்றும் கென்யா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் பணியாளர்கள் 9ஆயிரம் ரியாலுக்கும் சேர்த்துக்கொள்ளப்படுவர் என்று கட்டாரின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் அதிகாரபூர்வ வர்த்தமானியில் வெளியிடப்பட்ட திகதிக்கு அடுத்த நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் இந்தத் தீர்மானத்தை, அனைத்து தகுதிவாய்ந்த அதிகாரிகளும் செயல்படுத்த வேண்டும் என்று கட்டார் அரசாங்கம் அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகள் யாசகம் எடுப்பது தொடர்பான சட்டங்கள் இன்று முதல் கடுமையாக்கப்படும்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் யாசகம் எடுப்பது, வர்த்தகம் செய்வது மற்றும் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வீட்டு...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் கைது

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால்...

நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை,எதிர்வரும்...