follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுவைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் மனு பரிசீலனைக்கு திகதியிடப்பட்டது

வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் மனு பரிசீலனைக்கு திகதியிடப்பட்டது

Published on

குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 17ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்தடை சத்திர சிகிச்சை செய்ததாக போலியான குற்றச்சாட்டில் தனக்கு  கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும், தமக்கு நிலுவை சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடக்கோரி, வைத்தியர் ஷாஃபி இந்த நீதிப் பேராணை மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவின் பிரதிவாதிகள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான மேலதிக பிரதி மன்றாடியார் நாயகம், இந்த மனுவும் அது சார்ந்த ஆவணங்களும் நேற்றைய தினமே தமக்கு கிடைக்கப்பெற்றதாகவும், இதனை பரிசீலிக்க தமக்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், மேற்படி கோரிக்கையை பரிசீலித்த நீதியரசர்கள் அதற்கு அனுமதியளித்த அதேவேளை,  மனுவை எதிர்வரும் 17ஆம் திகதி பரிசீலனைக்கு எடுக்க உத்தரவிட்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான கட்டணங்கள் வெளியீடு

ஈலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவையானது இலங்கையில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தநிலையில், குடியிருப்பு மற்றும் வணிக...

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு – இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய வாய்ப்பு

தென் கொரியாவின் E-8 வீசா (பருவகாலத் தொழிலாளர் திட்டம்) கீழ் இலங்கை தொழிலாளர்களை ஈடுபடுத்தும் முன்னோடித் திட்டத்திற்கு 2025...

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நேரங்களில் மழை...