follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP1பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு 11 பில்லியன் ரூபா நட்டம்

பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு 11 பில்லியன் ரூபா நட்டம்

Published on

தற்போதைய சூழலில் இம் மாதத்தில் சுமார் 11 பில்லியன் ரூபா நட்டமேற்படலாம் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் அல்லது எரிபொருளுக்கான வரிச்சலுகைகளை வழங்க வேண்டும் என நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர், சட்டத்தரணி சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் எரிபொருட்களின் விலை தொடர்ந்தும் இவ்வாறு பேணப்படுமாயின், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பாரிய நட்டத்தை எதிர்நோக்க வேண்டியேற்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

டொலர் பற்றாக்குறையினால் எதிர்காலத்தில் நாட்டின் எரிபொருள் விநியோகம் நெருக்கடிக்கு உள்ளாகும் என எரிசக்தி அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனை கருத்திற்கொண்டு எரிபொருள் மீதான வரியை குறைக்குமாறு அல்லது எரிபொருள் விலை அதிகரிப்பை துரிதப்படுத்துமாறு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சட்டவிரோதமாக உர மோசடியில் ஈடுபட்ட 12 பேர் கைது

பொலன்னறுவையில் மோசடி உரவிற்பனையில் ஈடுபட்ட 12 பேர் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலன்னறுவை ஶ்ரீபுர பிரதேசத்தில் இந்தச்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் இன்று

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...

பேரூந்துகள் இறக்குமதிக்கு புதிய விதிமுறைகள்

2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து பொதுப் போக்குவரத்து பேரூந்துகள் இறக்குமதிக்கு புதிய விதிமுறைகள் அமுலில் கொண்டுவரப்படும் என போக்குவரத்து...