follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉலகம்தாம் களமிறங்கினால் மூன்றாம் உலகப்போர் நிகழும் - அமெரிக்கா எச்சரிக்கை

தாம் களமிறங்கினால் மூன்றாம் உலகப்போர் நிகழும் – அமெரிக்கா எச்சரிக்கை

Published on

உக்ரைன் போரில், ரஷ்ய படைகளுக்கு எதிராக அமெரிக்க படைகள் போரிடுமாயின், அது மூன்றாம் உலகப் போரைக் குறிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

ஆகவே உக்ரைனில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் தமது நாடு நேரடியாக தலையிடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனில் அமெரிக்காவின் உயிரியல் ஆயுதங்கள் கையாளப்படுவதாக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் ரஷ்யா குற்றம் சாட்டிய நிலையில், ஜோ பைடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நேட்டோ பிரதேசத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஒன்றுபட்ட நேட்டோவின் முழு பலத்துடன் பாதுகாப்போம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார்.

ஆகவே உக்ரைனில் இருந்து ரஷ்யாவுக்கு எதிராக போரிட மாட்டோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார்.

நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நேரடி மோதல், மூன்றாம் உலகப் போரைக் குறிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தாய்லாந்தின் பிரதமர் பதவி இடைநீக்கம்

தாய்லாந்தின் பிரதமராக இருந்த பெட்டோங்தார்ன் சினவத்ரா தனது பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவலளிக்கின்றன. இந்த முடிவுக்கு...

காசாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்கள்

காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து விமான மற்றும் நிலைத்தடிப் போராட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும், மருத்துவமனைகள், பாடசாலைகள், வீடுகள் மற்றும்...

தெலுங்கானாவில் இரசாயன தொழிற்சாலையில் வெடிப்பு

ஹைதராபாத் - தெலுங்கானா மாநிலம் சங்கர்ரெட்டி மாவட்டத்தில் இரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 10 பேர் உயிரிழந்தனர். தொழிற்சாலையில் ஊழியர்கள்...