follow the truth

follow the truth

May, 1, 2025
Homeஉள்நாடுஜனாதிபதி, பிரதமரின் பயணங்களில் மாற்றம் இல்லை - விமானப்படை

ஜனாதிபதி, பிரதமரின் பயணங்களில் மாற்றம் இல்லை – விமானப்படை

Published on

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு விமான வசதிகள் வழங்குவதை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை விமானப்படை தீர்மானித்துள்ளது.

எனினும்  ஜனாதிபதி மற்றும் பிரதமரின்  பயணங்கள் தொடர்பில் இந்த மட்டுப்படுத்தல்கள் முன்னெடுக்கப்படமாட்டாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க இதனை தெரிவித்தார்.

பிரதானமாக  நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டும் அதனுடன் இணைந்ததாக  கொரோனா நிலைமையினை கருத்தில் கொண்டும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறூப் கெப்டன்  துஷான் விஜேசிங்க குறிப்பிட்டார்.

அதன்படி, இனிமேல்  அத்தியாவசிய தேவைக்காக மட்டும் , பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் மாத்திரமே விமான சேவைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க  சுட்டிக்காட்டினார்.

தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு, அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் முகாமைத்துவம் செய்யப்படுவதாக சுட்டிக்காட்டும்  விமானப்படை பேச்சாளர் குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க,  அமைச்சகள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விமான வசதிகள் மட்டுமன்றி,  வான்வழி கண்காணிப்பு கடமைகள் மற்றும் விமானி பயிற்சி நடவடிக்கைகளைக் கூட இனி மேல் கூட்டாக மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...