follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுஅன்டனாவை அகற்ற டயலொக் தீர்மானம்

அன்டனாவை அகற்ற டயலொக் தீர்மானம்

Published on

வலையமைப்பு நெரிசலுக்குத் தீர்வாக காலி முகத்திடலில் புதிதாக நிறுவப்பட்ட 20 அடி அன்டனா அமைப்பை அகற்ற இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான டயலொக் தீர்மானித்துள்ளது.

அந்த நிறுவனம் இன்று விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

காலி முகத்திடலில் திறன் மேம்படுத்தல் தீர்வு தொடர்பாக பொதுமக்கள் எழுப்பியுள்ள கவலைகளை கருத்தில் கொண்டும், அதற்கு மதிப்பளிக்கும் வகையிலும் டயலொக் அன்டனா கட்டமைப்பு நிறுவலை நீக்கிக் கொள்வதற்கான முடிவை எடுத்துள்ளதாக அறிவிக்கின்றது.

காலி முகத்திடல் பகுதியில் வலையமைப்பு நெரிசல் அளவைக் குறைப்பதே மேற்படி டயலொக் அன்டனா நிறுவலின் ஒரே நோக்கம்தாகும் என்பதை டயலொக் நிறுவனம் மீண்டும் வலியுறுத்துகிறது.

தற்போதுள்ள உள்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி அப்பகுதியில் நெரிசல் அளவைக் குறைப்பதற்கான நிறுவனத்தின் சிறந்த முயற்சிகளை, மேற்கொள்ளும் என்பதை மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு டயலாக் உறுதியளிக்கிறது என அதில் குறிப்பிடபட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பகிடிவதை தொடர்பில் பிரதமரின் கவனம்

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் கொடுமைப்படுத்தல், துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளை தடுக்கும் வகையில் பரிந்துரைகள் மற்றும் தீர்வுகளை...

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான கட்டணங்கள் வெளியீடு

ஈலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவையானது இலங்கையில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தநிலையில், குடியிருப்பு மற்றும் வணிக...

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு – இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய வாய்ப்பு

தென் கொரியாவின் E-8 வீசா (பருவகாலத் தொழிலாளர் திட்டம்) கீழ் இலங்கை தொழிலாளர்களை ஈடுபடுத்தும் முன்னோடித் திட்டத்திற்கு 2025...