follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுவெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் அரச ஊழியர்களுக்கு...

வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் அரச ஊழியர்களுக்கு…

Published on

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை எதிர்பார்க்கும் அரச சேவையாளர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையதளம் மூலம் தங்கள் தகவல்களை வழங்க முடியும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்தோடு அரச சேவையாளர்களுக்கு தகுதியான வேலைவாய்ப்புக்களை வெளிநாடுகளில் இருந்து பெற்றுவருமாறு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவங்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டில் ஏட்பட்டுள்ள நெருக்கடியான நிலையை சமாளிக்க வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களின் வீதத்தை அதிகரிக்க முன்னெடுக்கப்படும் செயட்பாடுகளின் ஒரு கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அரச சேவையாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது அவர்களின் ஓய்வூதியம், மற்றும் அவர்களின் தொழில் தொடர்பில் எந்த பாதிப்பும் வராத வகையில் ஒரு சுற்றறிக்கையை வெளியிடவும் ஏனைய அமைச்சுக்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவங்களின் உரிமையாளர்களிடம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை,எதிர்வரும்...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம்

2025 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் அடிப்படையில், ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், ‘சிரேஷ்ட...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் இன்றைய தினம் கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. உலக...