follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுரவிந்து மற்றும் அவரது மனைவிக்கு பிணை!

ரவிந்து மற்றும் அவரது மனைவிக்கு பிணை!

Published on

கைது செய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சியின் மகன் மற்றும் மருமகள் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று வலஸ்முல்லை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் இந்த பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 1ஆம் திகதி தெற்கு அதிவேக வீதியின் பெந்திகம சந்திப்பில் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் குற்றவியல் வன்முறையில் ஈடுபட்டதாக ரவிந்து வெதஆராச்சி மற்றும் அவரது மனைவி நெத்மி ஹரிந்தி டி சில்வா ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வௌியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

14 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் ‘ Sri Lanka Expo – 2026’

இலங்கை எக்ஸ்போ கண்காட்சி 2026 தேசிய வைபவமாக ஏற்பாடுகளைச் செய்வதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் அவர்கள்...

விலை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே எரிபொருள் விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன

விலை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே விலைகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் போது அவற்றை ஏற்றுக்...

கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்

கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC), யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 30ஆம்...