follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP1பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை தற்போது கிடையாது

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை தற்போது கிடையாது

Published on

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை தற்போது கிடையாது என சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று(08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை காணப்படுமாக இருந்தால், அதற்கான அனுமதியை வழங்க முடியும் எனவும் அவ்வாறான சூழ்நிலை தற்போது கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டியது, கல்வி அதிகாரிகளின் பொறுப்பு எனவும், அந்த சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீகிரியா உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படுமா?

உலக பாரம்பரிய தளமான சீகிரியாவை பாதுகாக்க, அதனைச் சுற்றி அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள்...

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேர்வின் சில்வா...

நீர்கொழும்பு துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு

நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் இன்று (3) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற மோட்டார்...