follow the truth

follow the truth

May, 2, 2025
Homeஉலகம்ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் இடைக்கால அரசாங்கத்தை அமைத்தனர்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் இடைக்கால அரசாங்கத்தை அமைத்தனர்

Published on

தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசாங்கத்தினை அமைத்து அந்த நாட்டை இஸ்லாமிய எமிரேட்ஸ் என அறிவித்துள்ளனர்.

இதற்கமைய, ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாதிகளுக்கான கருப்பு பட்டியலில் உள்ள முல்லாஹ் மொஹமட் ஹஸன் அகுந்த தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், தலிபான்களின் இணை நிறுவுனரான முல்லாஹ் அப்துல் கானி பரதர் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

20 வருடங்களான ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க துருப்பினர்கள் கடந்த மாதம் 31 ஆம் திகதியுடன் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.

இதனையடுத்து, ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், அங்கு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அறிவித்தனர்.

எனினும், தலிபான்களின் ஆட்சியை விரும்பாத இலட்சக்கணக்கான பொதுமக்கள் ஆப்கானிஸ்தானில் விட்டு வெளியேறியேறியிருந்தனர்.

இந்நிலையில், நாட்டின் பொருளாதாரம் மற்றும், சர்வதேச அங்கிகாரத்தினை பெறுவதில் புதிய இடைக்கால அரசாங்கம் பல சவால்களை எதிர்நோக்கும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரேடியோக்களில் இந்திய சினிமா பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்த பாகிஸ்தான்

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில்...

பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள், இராணுவ...

இஸ்ரேலில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ – தேசிய அவசர நிலை அறிவிப்பு

இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயை கட்டுப்படுத்த உலக நாடுகள் உதவ வேண்டும் என...