follow the truth

follow the truth

June, 26, 2025
Homeஉள்நாடுதேசிய சபைக்கு ஒப்புதல்

தேசிய சபைக்கு ஒப்புதல்

Published on

பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 37 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய சபைக்கு, கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஒப்புதல் பெற்றுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளை தணிக்கும் வகையில், ´தேசிய சபை´ அமைப்பது தொடர்பில் தீர்மானிக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டம் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் பங்கேற்புடன் இன்று (07) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது.

அந்த உடன்படிக்கையின்படி, சபாநாயகர் தேசிய சபையின் தலைவராகவும், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சபைத் தலைவர் மற்றும் ஆளும் கட்சியின் தலைமை அமைப்பாளர் ஆகியோர் அதிகாரபூர்வமாக அதன் உறுப்பினர்களாகவும் ஆவர்.

தேசிய சபையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 37 ஆகும், இதில் பாராளுமன்றத்தில் செயல்படும் அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இது தொடர்பான பிரேரணையை உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைப் பிரதானியாக

இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ பதவி நிலை பிரதானியாக இலங்கை பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கபில...

முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் கைது

முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்தா இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். தரமற்ற மருந்துகளை...

கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர்...