follow the truth

follow the truth

June, 24, 2025
Homeஉள்நாடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமி தொடர்பில் பொலிஸார் விசாரணை

காட்டில் புதைக்கப்பட்ட சிறுமி தொடர்பில் பொலிஸார் விசாரணை

Published on

இரத்தினபுரி – தெல்வல பகுதியில் காட்டில் இரகசியமான முறையில் 7 வயது சிறுமி புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுமியின் தாய் வேறு ஒருவருடன் வசிக்கும் நிலையில், சிறுமி தாக்கப்பட்டுள்ளார்.

வீட்டிலிருந்த மாணிக்கக்கல் ஒன்று காணாமற்போனமைக்காக கறுவாத் தடியால் சிறுமி தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

எனினும், தாக்குதலுக்கு உள்ளான சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்காமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில், சிறுமியின் தாயாருடன் வசிக்கும்  நபரை மதுபான விற்பனை தொடர்பில் கைது செய்ய பொலிஸார் சென்றிருந்த போது, வீட்டிலிருந்த அனைவருடனும் குறித்த நபர் காட்டிற்குள் சென்று தலைமறைவாகியுள்ளார்.

ஏற்கனவே தாக்குதலுக்கு இலக்காகியிருந்த 7 வயது சிறுமி, இதன்போது உயிரிழந்தமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘உலக முடிவு’ சுற்றுலா தலத்துக்கு செல்ல மேலும் 02 நடைபாதைகள்

நுவரெலியா மாவட்டத்தில் ஹோர்டன் சமவெளியில் அமைந்துள்ள 'உலக முடிவு' சுற்றுலா தலத்துக்கு செல்ல மேலும் இரண்டு நடைபாதைகளை அமைக்க...

119 அவசர அழைப்பு சேவை குறித்து பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 119 அவசர அழைப்பு சேவைக்கு வரும் அழைப்புகளில், உண்மையான அவசர முறைப்பாடுகளுக்கு பதிலாக, தவறான...

கடவத்தையில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

கடவத்தையில் உள்ள ஆடை விற்பனை கடையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவைகள்...