நுவரெலியா மாவட்டத்தில் ஹோர்டன் சமவெளியில் அமைந்துள்ள ‘உலக முடிவு’ சுற்றுலா தலத்துக்கு செல்ல மேலும் இரண்டு நடைபாதைகளை அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நோன்பரீல் தேயிலைத் தோட்டம் ஊடாக ஒரு நடை பாதையும், கத்பொத்துதென்ன (Gathpothutenna) ஊடாக இஹல கலகம வீதியில் மற்றுமொரு நடைபாதையும் அமைக்க கடந்த வாரம் இம்புல்பே பிரதேச செயலகத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த பகுதிகள் சூரதலி மற்றும் பஹந்துவ நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஹிரிகட்டு ஓயா மற்றும் சமனல குளம் ஆகியவற்றுக்கு பிரசித்தி பெற்றவைகளாகும்.
சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன மற்றும் அதிகாரிகளுடன் பெலிஹுல் ஆற்றை சுற்றுலா தலமாக மேலும் அபிவிருத்தி செய்வதற்கான வழிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.