follow the truth

follow the truth

June, 20, 2025
Homeஉள்நாடுபதினொரு நாட்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை!

பதினொரு நாட்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை!

Published on

செப்டெம்பர் மாதத்தின் முதல் 19 நாட்களில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை 10,000 ஐக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இது நாட்டிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் மெதுவாக ஆனால் நிலையான அதிகரிப்பைக் குறிக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தற்காலிகத் தரவுகளின்படி, செப்டம்பர் 1ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தம் 10 ஆயிரத்து 796 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதனையடுத்து, ஆண்டுக்கான மொத்த வருகைகள் 5 இலட்சத்து 7 ஆயிரத்து 226 ஐ எட்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட காலத்திற்கான தினசரி வருகை விகிதம் ஒரு நாளைக்கு 979 சுற்றுலாப் பயணிகளாகும் என்றும் அந்தச் சபை தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் இந்தியா, யுனைடெட் கிங்டம் மற்றும் அவுஸ்ரேலியாவில் இருந்தே அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துசித ஹல்லோலுவவுக்கு பிணை

அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவுக்கு கோட்டை...

இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட சீனர்கள்

இணையவழி குற்றம் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 85 சீன பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர்.  இலங்கையிலிருந்து விசேட விமானம்...

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பிலான அறிவிப்பு

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒரேயடியாக நிறுத்தப்படாது என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன...