எதிர்வரும் முதலாம் திகதி திட்டமிடப்பட்டிருந்த வருடாந்திர பேருந்து கட்டண திருத்தத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான்-இஸ்ரேல் போர் சூழ்நிலையை எதிர்கொண்டு உலக சந்தையில் எரிபொருள் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால், இந்த நேரத்தில் பேருந்து கட்டண திருத்தம் செய்வது தொழில்துறைக்கு பாதகமானது என்று அவர் தெரிவித்தார்.