follow the truth

follow the truth

June, 20, 2025
Homeஉலகம்அமைதியை சீர்குலைக்கும் ‘புற்றுநோய் போன்ற நாடு’ இஸ்ரேல் - ஈரானுக்கு வட கொரியா ஆதரவு

அமைதியை சீர்குலைக்கும் ‘புற்றுநோய் போன்ற நாடு’ இஸ்ரேல் – ஈரானுக்கு வட கொரியா ஆதரவு

Published on

ஈரான் மீதான இஸ்ரேலின் சமீபத்திய வான்வழித் தாக்குதலை “கொடூரமான ஆக்கிரமிப்புச் செயல்” என்று வட கொரியா கண்டித்துள்ளது. இது மேற்கு ஆசியாவில் மிகப் பெரிய போரை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் வடகொரியா எச்சரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் ஆதரவுடன் செயல்படும் இஸ்ரேல், மேற்கு ஆசியாவில் அமைதியை சீர்குலைக்கும் ‘புற்றுநோய் போன்ற நாடு’ என்று வடகொரிய அரசு நடத்தும் செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ (KCNA) வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ள யோன்ஹாப் நாளிதழின் செய்தியில் வெளியிட்டுள்ளது.

‘ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பினார். மேற்கு ஆசியாவில் முழுமையான போரின் அபாயத்தை இஸ்ரேல் எழுப்பியதற்காக கண்டனம் தெரிவித்தார் ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவதாகவும், இது “மனிதகுலத்துக்கு எதிரான மன்னிக்க முடியாத குற்றம்” என்றும் வட கொரிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுவிஸ் வங்கியில் அதிக பணம் வைத்திருக்கும் நாடு

சுவிட்சர்லாந்து வங்கியில் இந்தியர்களின் பணமே அதிகமாக காணப்படுவதாக அந்நாட்டின் தேசிய வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது. அதன்படி சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள...

வெடித்துச் சிதறிய எலான் மஸ்கின் SpaceX ராக்கெட்

அமெரிக்காவின் டெக்சாஸில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் சோதனையின்போது வெடித்துச் சிதறியதனால் அப்பகுதியில் பெரும் தீப்பிழம்பு...

கடந்த 24 மணி நேரத்தில், காசா பகுதியில் நடந்த போரில் 140 பேர் பலி

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களில் பெரும்பாலோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா பகுதியில்...