follow the truth

follow the truth

June, 13, 2025
HomeTOP1தாமரை கோபுரம் இன்று முதல் மக்கள் பார்வைக்கு!

தாமரை கோபுரம் இன்று முதல் மக்கள் பார்வைக்கு!

Published on

தெற்காசியாவின் மிக உயரமான கட்டடமாகக் கருதப்படும் தாமரைக் கோபுரம் இன்று(15) முதல் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படவுள்ளது.

தாமரைக் கோபுரத்தை திறக்கும் முதல் கட்டம் இதுவாகும்.

இரண்டாம் கட்ட செயற்பாடுகள் இன்னும் 2 மாதங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் மூன்றாம் கட்ட திறப்பு விழாவை அடுத்த வருடம் மார்ச் மாதம் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு தாமரை கோபுர தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோபுரத்தின் கீழ் பகுதி 3 தளங்களைக் கொண்டுள்ளதுடன் குறித்த பகுதியில் டிஜிட்டல் திரையரங்கு, மாநாட்டு அரங்கம், வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான அலுவலக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மூன்றாவது மற்றும் நான்காவது மாடிகள் திருமண நிகழ்வுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன் ஐந்தாவது மாடியில் சுழலும் ஹோட்டல் அமைந்துள்ளது.

ஆறாவது மாடியில் 6 சொகுசு அறைகள் கட்டப்பட்டுள்ளதுடன் ஏழாவது மாடி பார்வையாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கொழும்பு தாமரை கோபுர வளாகத்திற்கு நேற்று(14) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அனுராதபுரம் சிறைச்சாலை அதிகாரி மீண்டும் விளக்கமறியலில்

அனுராதபுரம் சிறைச்சாலை அதிகாரி மொஹான் கருணாரத்னவை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று (13)...

விமான விபத்து – ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் இலங்கை

அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்திய விமான விபத்தில் பல உயிர்கள் பலியானது குறித்து, இலங்கை மிகுந்த அதிர்ச்சியும் கவலையும்...

விமான விபத்தில் 14 குழந்தைகள் உட்பட 133 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு இன்று மதியம் ஏர் இந்தியாவின் ஏஐ 171...