follow the truth

follow the truth

June, 10, 2025
Homeஉள்நாடுஜப்பான் செல்கிறார் ஜனாதிபதி ரணில்!

ஜப்பான் செல்கிறார் ஜனாதிபதி ரணில்!

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இம்மாதம் இறுதியில் ஜப்பான் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின்  இந்த விஜயத்தின் போது இலங்கையின் கடன் நெருக்கடியை சமாளிக்கும் விதமாக தமது பிரதான இருதரப்பு கடன் வழங்குநர்களான சீனா மற்றும் இந்தியாவுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க அழைக்குமாறு ஜப்பானுக்கு வலியுறுத்துவார் எனவும் ஜனாதிபதி செயலகத்தின் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விவகாரங்கள் அவரது நிகழ்ச்சி நிரலில் முதன்மையாக இருக்கும் எனவும், ஜனாதிபதி ரணில், ஜப்பானிய பிரதமரை டோக்கியோவில் சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியுடன்  முன்னெடுக்கும் நிகழ்வில், தற்போதைய நெருக்கடி மற்றும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திட்டமிடப்பட்ட சீர்திருத்தங்கள் பற்றிய அண்மைக்கால  தீர்மானங்கள் குறித்தும் ஜனாதிபதி முன்வைப்பார் என  ஜனாதிபதி செயலகத்தின் வட்டாரம் தெரிவிக்கின்றது.

ஜனாதிபதியின் இந்த விஜயம் இம்மாதம் 25 ஆம் திகதி முன்னெடுக்கப்படும் எனவும் செப்டெம்பர் 30ஆம் திகதி அவர் மீண்டும் நாடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் செப்டெம்பர்  28 ஆம் திகதி பலதரப்பு நிதி நிறுவனத்தின் 55வது ஆண்டு கூட்டத்தின் நிகழ்வில் பங்கேற்பார் எனவும் கூறப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2025ல் இலக்குவைக்கப்பட்ட மதுவரி வருமானத்தில் 104% ஈட்ட முடிந்துள்ளது

இந்த வருடத்தில் இலக்கு வைக்கப்பட்ட மதுவரி வருமானமான ரூபா 242 பில்லியனில் 2025 மே 31ஆம் திகதியாகும்போது எதிர்பார்க்கப்பட்ட...

CIDயில் ஆஜராகவுள்ள ரணில் விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் புதன்கிழமை (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர்...

அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரி மோகன் கருணாரத்ன இம்மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று...