follow the truth

follow the truth

May, 20, 2025
Homeஉள்நாடுநிலக்கரிக்கு கேள்வி மனுக்கோரல்!

நிலக்கரிக்கு கேள்வி மனுக்கோரல்!

Published on

சுமார் 22 லட்சத்து 50 ஆயிரம் மெற்றிக் டன் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கான கேள்வி மனுக்கோரல் எதிர்வரும் 27ம் திகதி இடம்பெறும் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவையினால் அண்மையில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

ஒகஸ்ட் 25 ஆம் திகதி டுபாயின் பிளக் சென்ட் கொமடிடீஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலக்கரி கேள்வி மனுவை ரத்து செய்ய அமைச்சரவை அனுமதியளித்தமையை அடுத்து இவ்வாறு புதிய கேள்வி மனுவை கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சினால் விடுக்கப்பட்ட யோசனைக்கு அமைய அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளது. நீண்ட கால கடன் திட்டத்தின் கீழ் நிலக்கரியை வழங்கக் கூடிய விநியோகஸ்த்தர்களுக்கு இடமளித்து புதிய கேள்வி மனுக்களுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்துள்ள இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹெவகே, தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் வெளிநாட்டு நிறுவனத்தினால் நிலக்கரியை விநியோகிக்க முடியுமா? என்பதை கருத்தில் கொண்டு விநியோகஸ்த்தர்கள் கேள்வி மனுவை முன்வைக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

சர்வதேச ரீதியாக உள்ள எந்தவொரு விநியோகஸ்த்தரும் இதில் பங்கேற்க முடியும். திறந்த சர்வதேச கேள்வி மனுக்கோரலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹெவகே தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் நீரில் மூழ்கும் 20 இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன. ஆமர் வீதி மற்றும்...

படலந்த அறிக்கையை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழு

சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, படலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார். அதன்படி, சம்பந்தப்பட்ட...

மிலான் ஜயதிலக்கவை பிணையில் விடுவிக்க உத்தரவு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்கவை பிணையில் விடுவிக்க...