follow the truth

follow the truth

May, 1, 2025
Homeவிளையாட்டுஅணி வீரர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்த இலங்கை கிரிக்கெட்

அணி வீரர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்த இலங்கை கிரிக்கெட்

Published on

சுற்றுலா தென்னாபிரிக்கா அணியுடனான டி-20 தொடரின்போது இலங்கை அணி வீரர்கள் சிலர் முழுமையான அர்ப்பணிப்புடன் போட்டிகளில் விளையாடவில்லை என சில ஊடக அறிக்கைகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மறுத்துள்ளது.

இது தொடர்பில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு எதிராக இலங்கை வென்ற ஒருநாள் தொடரில் விளையாடிய அதே குழுவினர் தான் டி-20 தொடரிலும் பங்கெடுத்தனர் என இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது மட்டுமல்லாமல், ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ண சூப்பர் லீக் தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணி சிறப்பான புள்ளிகளைப் பெற்றது.

எனவே ஐ.சி.சி. ஆண்கள் T20 உலகக் கிண்ணம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இது போன்ற தவறான அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்த்து, பத்திரிகை நெறிமுறை நடைமுறைகளை உரிய செய்தி நிறுவனங்கள் பின்பற்றுமாறும் இலங்கை கிரிக்கெட் வலியுறுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? – ஹைதராபாத்துடன் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னையில் இன்று நடக்க இருக்கும் 43-ஆவது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை சென்னை சூப்பர்...

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (23) இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக்...