follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉலகம்சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு இரத்து

சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு இரத்து

Published on

நியூயோர்க்கில் நடைபெறவிருந்த சார்க் (தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு) வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு இரத்து செய்யப்பட்டுள்ளது.

சார்க் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் 25 ஆம் திகதி நியூயார்க் நகரில் நடைபெறவிருந்தது.

இந்த மாநாட்டில் பங்கேற்க தலிபான் பிரதிநிதிகளையும், அனுமதிக்க வேண்டும் என பாகிஸ்தான் யோசனை முன்வைத்துள்ளது.

குறித்து உறுப்பு நாடுகளின் ஒருமித்த இணக்கமில்லாத காரணத்தினால் சார்க் மாநாடு இரத்து செய்யப்பட்டுள்ளது என்று அமைப்பின் பல இராஜதந்திர வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

சார்க் அமைப்பில், இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், மாலைதீவு மற்றும் ஆப்கானிஸ்தான் முதலான 8 நாடுகள் சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

இது தொடர்பில் ஒரு அறிக்கையை வெளியிட்ட நேபாள வெளியுறவு அமைச்சகம், அனைத்து உறுப்பு நாடுகளின் ஒப்புதல் இல்லாததால் சந்திப்பு இரத்து செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டியது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் – ட்ரம்ப்

காசா பகுதியில் 60 நாட்களுக்கு போர் நிறுத்தம் அமல்படுத்த இஸ்ரேல் சம்மதித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த...

ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்பம்

தெற்கு ஐரோப்பிய நாடுகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை ஸ்பெயினின் எல் கிரனாட்...

டெல்லியில் பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய தடை

15 ஆண்டுகள் பழைமையான பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்களுக்கு இன்று (ஜூலை 1)...