follow the truth

follow the truth

July, 29, 2025
Homeஉள்நாடுநாட்டிற்கு நன்கொடையாக 144 மெட்ரிக் தொன் சோள விதைகள்

நாட்டிற்கு நன்கொடையாக 144 மெட்ரிக் தொன் சோள விதைகள்

Published on

ஜெய்க்கா நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியம் ஆகியவற்றால் 144 மெட்ரிக் தொன் சோள விதைகள் இன்று(22) விவசாய அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளது.

பெரும்போக சோள உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், இந்த சோள விதைகள் நன்கொடையாக கிடைக்கவுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் ஜயந்தா இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் தூதரகத்தில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர், இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் சோள விதைகளை கையளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த சோள விதைகள் மொனராகலை மற்றும் அம்பாறை மகாவலி வலயத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக 2,900 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் கடற்படைத் தளபதி கைது

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படை புலனாய்வு பணிப்பாளராக இருந்த காலத்தில்...

நாமலை கைது செய்ய பிடியாணை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கில் ஆஜராகத்...

இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் மேர்வின் மீது தொடரப்பட்ட வழக்குக்கு திகதி குறிப்பு

அமைச்சராகப் பணியாற்றி சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட...