follow the truth

follow the truth

July, 29, 2025
Homeஉள்நாடுதொழில்வாய்ப்பு மோசடி : இருவருக்கு விளக்கமறியல்

தொழில்வாய்ப்பு மோசடி : இருவருக்கு விளக்கமறியல்

Published on

ருமேனியா தொழில்வாய்ப்பு மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட இத்தாலிய பிரஜை உள்ளிட்ட இருவர் எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஏனைய இலங்கை பிர​ஜைகள் இருவருக்கும் தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி சட்டவிரோதமாக நேர்முகத் தேர்வு நடத்திய நால்வர் பதுளை பிரதேசத்தில் வைத்து நேற்று முன்தினம்(20) கைது செய்யப்பட்டனர்.

ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாக, வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அறிவிக்காமல் முகப் புத்தகத்தில்(Facebook) விளம்பரம் செய்யப்பட்டே குறித்த நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

பதுளை பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட இந்த நேர்முகத் தேர்வில் 30 பேர் வரை கலந்து கொண்டிருந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் கடற்படைத் தளபதி கைது

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படை புலனாய்வு பணிப்பாளராக இருந்த காலத்தில்...

நாமலை கைது செய்ய பிடியாணை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கில் ஆஜராகத்...

இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் மேர்வின் மீது தொடரப்பட்ட வழக்குக்கு திகதி குறிப்பு

அமைச்சராகப் பணியாற்றி சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட...