follow the truth

follow the truth

July, 4, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுமா...?

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுமா…?

Published on

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்து ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாராகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர குறிப்பிடுகின்றார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தங்களின் வாக்குப் பங்கைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், பிரிவினைவாதிகள் மற்றும் பல்வேறு கும்பல் குழுக்களை ஜனாதிபதி ஏற்கனவே சமாதானப்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது போன்ற பிரிவினைவாத நலன்களை அமுல்படுத்துவதாகவும் உறுதியளித்து வருவதாகவும், இதற்கு தனது சர்வதேச எஜமானர்களின் ஆதரவைப் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் ஜனநாயகத்தை இல்லாதொழிக்கும் தேர்தல் வரைபடத்தை சுருங்க அனுமதிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த அரசாங்கத்தால் எதனையுமே சரியாகச் செய்ய முடியாது – சஜித்

நேற்று இரவு கல்கிஸ்சை கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது. இன்று கந்தானைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரொன்று பலியாகியுள்ளது....

முன்னாள் பிரபல அமைச்சரை குறிவைக்கும் ரூ.120 மில்லியன் போலி வாகன மோசடி

மோசடியான ஆவணங்களை பயன்படுத்தி, ரூ.120 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புள்ள 6 ஜீப்புகளை சட்டவிரோதமாக ஒன்று சேர்த்து விற்பனை செய்ததாக,...

சிறையில் அடைக்கப்படுவது உறுதி – விமல் வீரவங்ச

தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, தமக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக...