follow the truth

follow the truth

May, 18, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியா"இன்னும் 12 வருடங்களுக்கு மக்கள் கொஞ்சம் பொறுத்திருங்கள்"

“இன்னும் 12 வருடங்களுக்கு மக்கள் கொஞ்சம் பொறுத்திருங்கள்”

Published on

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேயவர்த்தன கடந்த செவ்வாயன்று கண்டி மல்வத்து – அஸ்கிரி தேரர்களை சந்திக்கச் சென்றிருந்தனர்.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் இவ்வாறு கேட்டிருந்தார்;

“தலைவரே, நீங்கள் எதிர்வு கூறலில் கில்லாடி, உங்கள் எதிர்வுகூறல் பிரகாரம் நீங்கள் கடந்த காலங்களில் கூறினீர்கள், எங்களுக்கு ஒரு ஆசனம் தான் உள்ளது. அந்த ஆசனத்திற்கு ரணில் விக்கிரமசிங்கவை கொண்டு வந்து, பின்னர் அவரை பிரதமர் பதவியில் அமர்த்தி ஜனாதிபதி பதவியிலும் அமர்த்துவதாக தெரிவித்திருந்தீர்கள். அது அப்படியே நடந்து விட்டதே..”

அதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபயவர்த்தன;

” நான் எதிர்வுகூறுபவன் அல்ல, நான் ஒரு அரசியல்வாதி. சொல்லப் போனால் இன்னும் 12 வருடங்களுக்கு மக்கள் கொஞ்சம் பொறுத்திருங்கள்.. ரணில் விக்கிரமசிங்கவுக்கே நாட்டினை ஆட்சி செய்யக் கொடுத்தால், இலங்கை ஆசியாவில் மட்டுமல்லாது உலகிலேயே மிகவும் பலம் பொருந்திய பொருளாதாரத்தினை கொண்ட நாடாக மாற்றும் ஆளுமை அவருக்கு உண்டு..” எனத் தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தன போட்டியிடுவதா இல்லையா என்ற கேள்வி மக்கள் மத்தியில் அப்படியே இருக்கட்டுமே என ஜனாதிபதி...

“கன்னத்தில் அறைந்தது உண்மைதான்” – பிரசன்ன ரணவீர

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளை ஏற்றிச் செல்லும் போர்ட்டர் ஒருவரை சிறு மற்றும் நடுத்தர தொழில்...

புதிய அரசியல் கூட்டணியில் 15 SJP எம்பிக்கள்

அடுத்த தேர்தலுக்கு முன், புதிய கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் வரவிருக்கும் பரந்த கூட்டணியின் பணிகளை நிறைவுக்கு...