follow the truth

follow the truth

May, 2, 2025
Homeவிளையாட்டுஇறுதிப் போட்டிக்கு சென்னை அணி தகுதி

இறுதிப் போட்டிக்கு சென்னை அணி தகுதி

Published on

டெல்லி கெபிடல்ஸ் அணியை 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2021 ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரில் நேற்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கெப்பிடல் அணிகள் மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சென்னை அணி களத்தடுப்பை தேர்ந்தேடுத்தது

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

சென்னை அணி சார்பில் ருதுராஜ் 70 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

அதேபோல்,ரொபின் உத்தப்பா 60 ஓட்டங்களையும் அணித்தலைவர் மகேந்திர சிங் தோணி ஆட்டமிழக்காது 18 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

குஜராத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத் – இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்...

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? – ஹைதராபாத்துடன் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னையில் இன்று நடக்க இருக்கும் 43-ஆவது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை சென்னை சூப்பர்...