follow the truth

follow the truth

July, 1, 2025
HomeTOP1கொழும்பு விகாரையில் துருப்பிடித்த கைக்குண்டு மீட்பு!

கொழும்பு விகாரையில் துருப்பிடித்த கைக்குண்டு மீட்பு!

Published on

பொரலஸ்கமுவ, பெல்லன்வில ரஜமகா விகாரையின் மதிலுக்கு அருகில் இருந்து இன்று (13) கைக் குண்டொன்று மீட்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

விகாரை வளாகத்தில் துப்பரவு பணிகளில் ஈடுபட்டிருந்த போது இந்த கைக்குண்டு மீட்கப்பட்டதாகவும், இது துருப்பிடித்த நிலையில் இருந்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் டெய்லி சிலோனுக்குத் தெரிவித்தார்.

விகாரையின் பணியாளர் இருவர் வழங்கிய தகவலுக்கமைய பொலிசார் குறித்த விகாரைக்குச் சென்று கைக்குண்டை மீட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கைக்குண்டை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்வதற்காக பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனையடுத்து விகாரைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கைக்குண்டு கைவிடப்பட்ட நிலையில் இங்கிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகள் யாசகம் எடுப்பது தொடர்பான சட்டங்கள் இன்று முதல் கடுமையாக்கப்படும்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் யாசகம் எடுப்பது, வர்த்தகம் செய்வது மற்றும் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வீட்டு...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் கைது

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால்...

நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை,எதிர்வரும்...