follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுஎரிபொருள் விநியோகம் வழமைக்கு

எரிபொருள் விநியோகம் வழமைக்கு

Published on

நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக இலங்கை பெட்ரோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

பல கோரிக்கைகளை முன்வைத்து பெட்ரோலிய தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் சில தாமதங்கள் ஏற்பட்டன.

எவ்வாறாயினும், பாதுகாப்புப் படையினரின் தலையீட்டின் காரணமாக விநியோக நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், தற்போது பொலிஸ் மற்றும் ஆயுதப்படையினரின் பாதுகாப்பில் நாடளாவிய ரீதியில் ஆர்டர் செய்யப்பட்ட எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு முனையத்தில் இருந்து மட்டும் நேற்று 200க்கும் மேற்பட்ட எரிபொருள் பவுசர்கள் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு சென்றுள்ளதாக இலங்கை பெட்ரோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை...

ரம்பொடை, கெரண்டியெல்ல விபத்து – பிரதமர் வைத்தியசாலைக்கு விஜயம்

ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில்...

இன்று மழையுடன் கூடிய காலநிலை

இன்று (12) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...