follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉள்நாடுஇலாபமீட்டும் சீனி நிறுவனங்களை விற்பது ஏன் - சஜித்

இலாபமீட்டும் சீனி நிறுவனங்களை விற்பது ஏன் – சஜித்

Published on

நாட்டின் சீனி நுகர்வில் கிட்டத்தட்ட 10% பெல்வத்தை மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளால் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது இத்தொழிற்சாலைகள் அமைந்துள்ள குறித்த பகுதியில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன.

அதுமட்டுமின்றி இந்தத் தொழிற்சாலைகளின் வருமானத்தைப் பயன்படுத்தி,1,200 மில்லியன் ரூபா செலவில் இரண்டு புதிய கம்போஸ்ட் உர தொழிற்சாலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதற்கும் வாய்ப்புக் கிட்டுகிறது. மேலும் இப்பகுதியின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கும் இந்நிறுவனங்கள் பெரும் பங்களிப்பை வழங்குகின்றன.

கடந்த ஆண்டு செவனகல சீனி தொழிற்சாலையால் 3 பில்லியன் ரூபாவை அதிகூடிய இலாபமாக ஈட்ட முடிந்தது.பெல்வத்தை தொழிற்சாலையும் கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் இலபகராமான நிறுவனமாக முன்கொண்டு செல்ல முடியுமாகவுள்ளது.

இதையும் தாண்டி, குறித்த இந்த இரண்டு தொழிற்சாலைகளாலும் கடந்த மார்ச் மாதத்தில் 350 மில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்க முடிந்தது. இருந்த போதிலும், குறித்த இந்நிறுவனங்களில் இருந்து அரசுக்கு வரும் வருமானம் இல்லாமலாக்கப்பட்டு 2011 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க செயற்பாடு குறைவாகவுள்ள தொழில்முயற்சிகளுக்கும் அல்லது குறைவாக பயன்படுத்தப்படும் சொத்துக்களுக்கும் புத்துயிரளித்தல் சட்டத்தின் கீழ் அரசாங்கத்திடம் கையகப்படுத்தப்பட்ட பெல்வத்தை மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளை மீண்டும் முன்னைய முதலீட்டாளர்களுக்கே வழங்க அரசாங்கம் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கவனம் செலுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025 ஜூன் மாதத்திற்கான வாராந்திர பொருளாதார சுட்டெண் அறிக்கையின் படி, ஜூன் 2025-இல்...

பொலிஸ் சேவையில் 28,000 வெற்றிடங்கள்

தற்போது இலங்கை பொலிஸ் சேவையில் 28,000க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் காணப்படுகின்றன என பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார...

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு

நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி அநுர குமார...