follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுசீனி விலை உயர்வு குறித்து அமைச்சர் அறிக்கை கோரல்

சீனி விலை உயர்வு குறித்து அமைச்சர் அறிக்கை கோரல்

Published on

சந்தையில் சீனியின் விலை அதிகரிப்பு தொடர்பில் அறிக்கையொன்றை வழங்குமாறு வர்த்தக முதலீட்டு கொள்கை திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

டொலரின் பெறுமதியும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சீனியின் விலை உயரும் சாத்தியக்கூறுகள் இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவிற்கு விதிக்கப்பட்டுள்ள வரி காரணமாக மாவின் விலையை அதிகரிக்க முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு சுமார் 13% குறைந்துள்ளதாகவும் உலக சந்தையில் கோதுமை மாவின் விலையும் சுமார் 15% குறைந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

இவ்வாறான நிலையில் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள வரி காரணமாக கோதுமை மாவின் விலையில் அதிகரிப்பு ஏற்படாது என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...