follow the truth

follow the truth

July, 26, 2025
HomeTOP1எரியும் பாகிஸ்தான் - போராட்டத்தின் போது ஒருவர் பலி, 6 பேர் காயம்

எரியும் பாகிஸ்தான் – போராட்டத்தின் போது ஒருவர் பலி, 6 பேர் காயம்

Published on

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து, பாகிஸ்தானில் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இஸ்லாமாபாத் மட்டுமின்றி, ராவல்பிண்டி, லாகூர், கராச்சி, குஜ்ரன்வாலா, பைசலாபாத், முல்தான், பெஷாவர், மர்தான் ஆகிய இடங்களிலும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இம்ரான் கானின் ஆதரவாளர்களை கலைக்க பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதையடுத்து, ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் பேரணிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் வாகனங்களுக்கு தீ வைத்தனர் மற்றும் பொலிசார் மீது கற்களை வீசினர்.

பொலிஸ் உத்தியோகத்தர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இம்ரான் கானின் ஆதரவாளர்கள் ராவல்பிண்டியில் உள்ள இராணுவ தலைமையகத்துக்குள்ளும், லாகூரில் உள்ள இராணுவ தளபதியின் வீட்டுக்குள்ளும் நுழைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

70 வயதான இம்ரான் கான் நேற்று இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக நுழைந்தபோது கைது செய்யப்பட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நாளை மட்டக்களப்பில்

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் திறமை செலுத்திய மாணவர்களை கௌரவிக்கும் கிழக்கு...

தாய்லாந்தில் உள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லை தாண்டிய பிரச்சினை கடந்த இரண்டு நாட்களாக நீடித்து வரும் நிலையில், இருநாடுகளிலும்...

பாடசாலை பெயர்ப் பலகைக்கு மாத்திரம் 2.4 மில்லியன் செலவு ? – கோபா குழு வெளியிட்ட தகவல்

809 மாகாணப் பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக மாற்றுவதற்காக பெயர்ப் பலகைகளுக்கு மாத்திரம் 2.4 மில்லியனுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கக்...