follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP1ரயில்வே பயணிகளுக்கான விசேட அறிவிப்பு

ரயில்வே பயணிகளுக்கான விசேட அறிவிப்பு

Published on

அடையாள வேலை நிறுத்தம் காரணமாக இன்று இயக்கப்படவிருந்த 5 அலுவலக ரயில் பயணங்களை நிலைய அதிபர்கள் இரத்து செய்துள்ளனர்.

இன்று (10) முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

நிலைய அதிபரின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நானுஓயாவிலிருந்து கண்டி மற்றும் கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படவிருந்த டிக்கிரி மெனிகே கடுகதி ரயில் இன்று இயங்காது.

இன்று அதிகாலை 3.55 மணிக்கு கணேவத்தையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் பாணந்துறை வரை இயக்கப்படவிருந்த அலுவலக ரயில் சேவையில் ஈடுபடாது.

மற்ற ரயில்கள் தாமதத்துடன் இயக்கப்படும் என்றும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், அளுத்கமவில் இருந்து கொழும்பு கோட்டை வரை அதிகாலை 3.40 மணிக்கு வந்து சிலாபம் வரை செல்லும் ரயில் இன்று நீர்கொழும்பு வரை மட்டுமே இயக்கப்படும்.

கொழும்பு கோட்டையில் இருந்து நூர்நகர் வரை அதிகாலை 4 மணிக்கு இயக்கப்படும் ரயில் சிலாபம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.

மேலும், நூர்நகரில் இருந்து கோட்டைக்கு இயக்கப்பட வேண்டிய மந்தகதி ரயில் இன்று சிலாபம் ரயில் நிலையத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கும்.

கோட்டையில் இருந்து நீர்கொழும்புக்கு காலை 7 மணிக்கு இயக்கப்படவிருந்த கடுகதி ரயில் இன்று இயக்கப்படாது.

இதனால் நீர்கொழும்பில் இருந்து கோட்டை வரை காலை 9 மணிக்கு இயக்கப்படும் புகையிரதமும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி மாலை 6.15 மணிக்கு இயக்கப்படவுள்ள ரயில் கோட்டை வரையிலான அனைத்து ரயில் நிலையங்களிலும் நிறுத்தப்படும்.

இதேவேளை, கடலோர பாதையில் அதிகாலை 4.20 மணிக்கு வந்து சிலாபத்தில் இருந்து மொரட்டுவை நோக்கிப் பயணிக்கும் ரயில் மருதானை புகையிரத நிலையத்தில் இருந்து காலை 6.57க்கு பாணந்துறை புகையிரத நிலையம் வரை பயணிக்கவுள்ளது.

குறித்த ரயில் வழமையான நிறுத்தங்களுக்கு மேலதிகமாக தெஹிவளை புகையிரத நிலையத்தில் இன்று நிறுத்தப்படும்.

அது காலை 7.05 மணிக்கு மருதானையில் இருந்த்கு புறப்படுகிறது.

இதேவேளை, காலை 5.50 மணிக்கு அளுத்கமவில் இருந்து காலி வரை இயக்கப்படும் மந்தகதி புகையிரதம் 34 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.

களனிவெளி புகையிரத பாதையில் காலை 6.30 மணிக்கு வாசாவில் இருந்து கோட்டை வரை செல்லும் ரயில் 31 நிமிடம் தாமதமாக இயக்கப்படுகிறது.

இதேவேளை, இன்று காலை 6.30 மணிக்கு அவிசாவளையில் இருந்து கோட்டை வரை இயக்கப்படும் மந்தகதி ரயில் சேவையில் ஈடுபடாது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தலாவாக்கலை பகுதியில் காரொன்று விபத்து

நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்திற்கு அதிவேகமாக பயணித்த கார் ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி மண்மேடு ஒன்றில்...

சிறையிலிருந்து தந்தையை காப்பாற்ற இம்ரான் கானின் மகன்கள் டிரம்ப்பிடம் கோரிக்கை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான் கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுக் கடந்த...

வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான சட்டங்கள் அமுலாக்கப்படும்

வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான விதிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். தற்போதுள்ள...