follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP1கொரியா பயணம் தடைப்பட்ட 48 தொழிலாளர்களுக்கும் மீள வாய்ப்பு 

கொரியா பயணம் தடைப்பட்ட 48 தொழிலாளர்களுக்கும் மீள வாய்ப்பு 

Published on

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் தாமதமானதால், தென்கொரியாவில் வேலை வாய்ப்பை எதிர்பார்த்திருந்த 48 தொழிலாளர்களின் வேலை கனவு தகர்ந்துள்ளதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஸ்ரீலங்கன் விமானம் கொழும்பில் இருந்து கொரியாவுக்கு மே 23 அன்று இரவு 8:00 மணிக்கு புறப்பட இருந்தது.

விமானத்தில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக குறித்த நேரத்திற்கு புறப்பட முடியாமல் மே 24ஆம் திகதி காலை 6 மணியளவில் விமானம் புறப்பட்டதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ஊடகச் செயலாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கொரியாவில் பணிபுரியும் தொழிலாளர்களின் விவகாரங்களை நிர்வகிக்க முடியாமல் கொரியாவிற்கு செல்ல தயாராக இருந்த தொழிலாளர்களின் வருகையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு கொரிய மனிதவள திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

எவ்வாறாயினும், இந்த தொழிலாளர்கள் எதிர்வரும் ஜூன் 4 ஆம் திகதி திருப்பி அழைக்கப்படுவார்கள் என கொரிய மனிதவள திணைக்களம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் துணை பொது மேலாளர் பி.ஜி.ஜி.எஸ் யாப்பா தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாடு கடத்தப்பட்ட மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

இந்த நாட்டில் பெரிய அளவிலான நிதி மோசடி சம்பவத்தில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள், இந்தியாவுக்கு தப்பிச் சென்ற...

மாணவர் விழுந்த சம்பவம் : சாரதி மற்றும் நடத்துனரின் அலட்சியே காரணம்

வடமேல் மாகாணத்தில் நேற்று (03) பதிவான சிசுசெரிய வகை பாடசாலை பேருந்து விபத்துக்கான விசாரணையில், சாரதி மற்றும் நடத்துனரின்...

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...