follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP1ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளன - சரத் வீரசேகர

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளன – சரத் வீரசேகர

Published on

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து விசாரணைகளும் தற்போது நிறைவடைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர தெரிவித்தார்.

மேற்படி விசாரணை தொடர்பில் பொலிஸாரின் சகல கடமைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

‘பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான அனைத்து விசாரணைகளையும் பொலிஸார் முடித்துள்ளதோடு, சட்டமா அதிபரிடம் அது ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி தாக்குதல்கள் தொடர்பாக ஐந்து உயர் நீதிமன்றங்களில் ஒன்பது வழக்குகள் தற்போது விசாரிக்கப்படுகின்றன,’ என்று அவர் கூறினார்.

சுமார் இரண்டரை வருடங்களில் மிகக் குறுகிய காலப்பகுதியில் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் எனவே ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கமோ அல்லது பொலிஸாரோ உரிய விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என எவராலும் குற்றம் சுமத்த முடியாது எனவும் வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

‘மிகக் குறுகிய காலத்தில் சுமார் 110,000 தொலைபேசி அழைப்புகளை நாங்கள் பகுப்பாய்வு செய்ய வேண்டியிருந்தது. மேலும், இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 24 தரப்பினர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுமார் 23,700 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான சட்டங்கள் அமுலாக்கப்படும்

வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான விதிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். தற்போதுள்ள...

சட்டவிரோதமாக உர மோசடியில் ஈடுபட்ட 12 பேர் கைது

பொலன்னறுவையில் மோசடி உரவிற்பனையில் ஈடுபட்ட 12 பேர் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலன்னறுவை ஶ்ரீபுர பிரதேசத்தில் இந்தச்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் இன்று

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...