follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுதொடரும் வேலைநிறுத்த போரட்டங்கள்...

தொடரும் வேலைநிறுத்த போரட்டங்கள்…

Published on

எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க சுகாதார நிபுணர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

ஆறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளருக்கு நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல தடவைகள் தமது கோரிக்கைகள் தொடர்பில் சுகாதார அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதிலும் இதுவரையில் முறையான கலந்துரையாடலை நடத்தத் தவறியுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதேவேளை அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் 9 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிபா் , ஆசிரியர்களின் தொழிற்சங்கங்களால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைகள் மேலும் கடுமையாக முன்னெடுக்கப்படும் என்று அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியங்கள் இம்மாதம் முதல்

வரவு செலவுத் திட்ட அறிவிக்கப்பட்ட ஓய்வூதிய உயர்வு, இம்மாதம் முதல் வழங்கப்படும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள்...

பகிடிவதை தொடர்பில் பிரதமரின் கவனம்

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் கொடுமைப்படுத்தல், துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளை தடுக்கும் வகையில் பரிந்துரைகள் மற்றும் தீர்வுகளை...

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான கட்டணங்கள் வெளியீடு

ஈலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவையானது இலங்கையில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தநிலையில், குடியிருப்பு மற்றும் வணிக...